உறுப்புக் கொடையாளர்களின் உடல், அரசு மரியாதையோடு அடக்கம் தமிழ்நாடு அரசினைப் பின்பற்றி கேரள அரசும் முடிவு!

1 Min Read

திருவனந்தபுரம், அக். 23 –  தமிழ்நாடு அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்பு களை கொடை செய்பவர்கள் மரணமடைந்தால் அரசு மரியா தையுடன் இறுதி நிகழ்வை நடத்துவது குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது.

உடல் உறுப்புகளை கொடை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இதன்படி உடல் உறுப்புகள் கொடை செய்பவர்களின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப் படும் என்று சமீபத்தில் அறிவிக் கப்பட்டது.

தமிழ்நாடு அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்புகளை கொடை செய்பவர்களின் இறுதி நிகழ்வை அரசு மரியாதையுடன் நடத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அரசி டம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்த பிறகு இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உடல் உறுப் புகளை கொடை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் திரைக் கலைஞர்கள் உள்பட சமூகத்தில் பிரபலமானவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேரள அரசு தீர்மானித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *