சிறுபான்மையினர் மீது திடீர் பாசமா? ஏன் இந்த நாடகம்? எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

திருவண்ணாமலை, அக். 23- நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையினர் மீது பாசம் காட்டுவது போல் எடப்பாடி பழனிச்சாமி நாடக மாடி வருகிறார் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி னார்.

திருவண்ணாமலை மாவட் டம் மலப்பாம்பாடி கிராமத்தில் திமுக வடக்கு மண்டல அள விலான வாக்குச்சாவடி முகவர் கள் பயிற்சிப்பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

இக்கூட்டத்தில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒளிமிகுந்த ஊரில் உங்கள் முகங் களையெல்லாம் பார்க்கும் போது  உதயசூரியனை பார்ப்பது போல் தோன்றுகிறது. தினமும் காலை சூரிய ஒளியை பார்க்கும் போது ஏற்படும் உற்சாகம் உங்களை பார்க்கும்போது ஏற் படுகிறது. எனது சக்தியின் ரகசி யமே நீங்கள்தான்.

கடந்த மார்ச் மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தை நடத்தினோம். 

அப்போதே தேர்தல் பணி களை தொடங்கிவிட்டோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் கமிட்டிகளை அமைத்துள் ளோம். வெற்றி ஒன்றே இலக் காக இருக்க வேண்டும். நாள் தோறும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். அர சின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ளுங் கள். யாருக்கு என்ன தேவையோ அதை பெற்றுக்கொடுங்கள். முதியோர் உதவித்தொகை உள் பட எந்த உதவி தேவையோ அதை கேட்டு உதவிக்கொடுங் கள். அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி புரிய வையுங்கள். நமது திட்டங் களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயன டைந்துகொண்டிருக்கிறது. அப்படி மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக் கிறோம்.

இதனால் திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத் துள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் செய்த சாத னைகளை கூறவேண்டுமானால் எனக்கு தனியே 2 மணி நேரம் வேண்டும்.

அவ்வளவு சாதனைகள் படைத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தான் நாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கி றோம் என்று மிகப் பெரிய பொய்யை எடப்பாடி பழனி சாமி கூறியுள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் அ.தி.மு.க. கொண்டுவந்த திட் டமா? பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அ.தி.மு.க. கொண்டுவந்த திட் டமா?

காலை சிற்றுண்டி திட்டம் யாருடையது அதிமுக திட்டமா? இது குறித்து எடப்பாடி பழனி சாமி பச்சை பொய் பேசி வருகிறார். அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராகலாம் திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி யில் நடைபெற்றதா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ் நாட்டின் நலன்களும், உரிமை களும் பாஜகவிடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது.

தி.மு.க. குடும்பக்கட்சி தான். கோடிக்கணக்கான குடும்பங் களை வாழவைக்கும் கட்சி தி.மு.க. ஒற்றை கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்க ளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக குடும்ப கட்சி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனி சாமி முழுமையாக தோற்கடிக் கப்பட இருக்கிறார். பாஜகவுடன் இருந்தால் டெபாசிட் கிடைக் காது என டெபாசிட்டை காப் பாற்ற தனியாக பிரிந்தது போல் உள்ளே வெளியே நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நிகழ்த் திக்கொண்டிருக்கிறார்.

மக்களை பிளவுபடுத்தி, அடி மைப்படுத்தக்கூடிய பாசிச பா.ஜ.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத் திற்கு திருவண்ணாமலை பாசறை கூட்டம் நல்ல வழிகாட்டியாக அமையட்டும். தீபம் தெரிவதை போல இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க இந்தியா கூட்டணி வாழ்க’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *