தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சென்னை சத்யமூர்த்தி பவனில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

1 Min Read

அரசியல்

சென்னை, அக். 23 –  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72ஆவது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று (22.10.2023) நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள் வழங்கி கொண் டாடினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-ஆவது பிறந்த நாள் விழா, கட்சியின் மாநில வழக் குரைஞர் அணி தலைவர் சந்திரமோகன் ஏற்பாட்டில் சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் சத்யமூர்த்தி பவன் வளாகத்தில் பட் டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விழாவில் வைக்கப் பட்டிருந்த 72 கிலோ கேக்கை, கட்சி யின் மூத்த தலைவர் பீட்டர் அல் போன்ஸ் வெட்டினார்.

விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அசைவ விருந்தும் வழங்கப் பட்டது. கட்சியின் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் உணவிட்டு விருந்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை, எளியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலிந்த காங்கிரஸ் மூத்த தொண்டர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் வாழ்த்து:  கே.எஸ்.அழகிரி பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துகள். மதச்சார்பின்மை, மனித நேயத்தை மய்யப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல் நலத் துடன் பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

மாநில எஸ்சி அணி சார்பில், அதன் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலை மையில் புதுப்பேட்டை பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மின்சாதன பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், பொதுச்செய லாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மாநில மகளிரணி தலைவி சுதா ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *