சென்னை, அக். 23 – மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெறும் பயனாளிகள் விவரங்களை மாதம்தோறும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு ஆய்வுகளின் மூலம் புதுப்பிக்கப் படும் பயனாளிகளின் பட்டிய லில் இருந்து யாரேனும் நீக்கப் பட்டால் அவர்கள் இணைய தளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
தி.மு.க.வின் தேர்தல் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த செப்.15ஆ-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக,1.68 கோடி விண் ணப்பங்கள் பெறப்பட்டு அதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செப்.14, 15 தேதிகளில் வரவு வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பல் வேறு தரப்பினரும் தங்களுக்கு உரிமைத் தொகை வரவில்லை என்று தெரிவித்ததால், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப் பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனாளிகள் சேர்க் கப்படுவார்கள் என்று அறிவிக் கப்பட்ட நிலையில், ஆயிரக் கணக்கில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், இந்த மாதம் தகுதி யான 5,041 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு தொகை செலுத் தப்பட்டது. மேலும், உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்த வர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பேர் பெயர்கள் தகுதி நீக்கம் செய் யப்பட்டன.
மீதமுள்ளவர்களுக்கு இந்த மாதம் கடந்த அக்.14ஆ-ம் தேதியே ரூ.1,000 உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் சேர்க் கப்பட்டது.
அந்த வகையில் இந்த மாதம் 1 கோடியே 6 லட்சத்து 48,406 மகளிருக்கு ரூ.1064 கோடியே, 84 லட்சத்து 6 ஆயிரம் செலுத் தப்பட்டுள்ளது. இவர்களில் முறையாக வங்கிக்கணக்கு இல் லாத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சலகம் மூலம் உரிமைத் தொகை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாதம்தோ றும் பயனாளிகள் விவரங்களை சரிபார்க்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகை யில் மாதம் தோறும் இறப்பு பதிவு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தரவுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்களின் பணியாளர்கள் பற்றிய தரவுகள், சமூக பாதுகாப்புத்திட்ட ஓய் வூதிய தரவுகள், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய தரவு கள், வருமானச் சான்று தரவுகள், நான்கு சக்கர, கனரக வாகனங் கள் பதிவு செய்யப்பட்ட தரவு கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
காலாண்டு முறையில், பொது விநியோகத் திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத் தப்பட்ட விவரங்கள், நில உடைமை தொடர்பான தகவல் தளங்கள் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். அரையாண்டு அடிப்படையில், தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின் பயன்பாடு ஆகியவற்றையும் ஆண்டுதோறும் வருமானவரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சம்பந்தப் பட்ட துறைகளிடம் இருந்து நிகழ் நேர முறையில் ஆய்வு செய்து, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பட்டியலை இணை யதளத்தில் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பித்தல் மூலம் நீக்கப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். இதுகுறித்து பயனாளி மேல் முறையீடு செய்ய விரும்பினால் இணையதளத்தில் முறையீடு செய்யலாம்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இணையதளம் வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகள் விவரங்களை, சம்பந்தப்பட்ட விஏஓக்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று, மாதம்தோறும் இணையதளத் தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகள் பட்டி யலை, மாதம்தோறும் 2ஆ-ம் தேதிக்குள் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசின் அறிவுறுத்தலில் கூறப்பட்டுள் ளது.