மீஞ்சூர் அருகே கோவில் திருவிழா கொடுத்த பரிசு பட்டாசு வெடித்ததில் 20 பேருக்கு தீக்காயம்

1 Min Read

சென்னை, அக். 23 – மீஞ்சூர் அருகே ராமரெட்டிபாளையம் வேணுகோ பாலசாமி கோயில் விழாவில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் 20 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந் துள்ளனர். இவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. திரு வள்ளூர் மாவட்டம் மீஞ்சூரையடுத்த ராமரெட்டி பாளையத்தில் பெருமாள் கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. 

இந்த கோயிலில் 5ஆம் வார சனிக் கிழமை திருவிழா நேற்றிரவு (22.10.2023) கொண்டாடப்பட்டது. இந்த கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்றிருக்கிறது. அப்போது பக்தர்கள் பட்டாசுகளை வெடித்திருக்கின்றனர். 

இப்படி வெடிக்கப்பட்ட பட்டாசுக ளிலிருந்து பறந்த தீப்பொறி ஒன்று குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டா சுகள் மீது விழுந்திருக்கிறது. ஊர்வலம் வந்த பக்தர்களோ, சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களோ இதை கவனிக் கவில்லை. இதற்கிடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மள மளவென வெடித்து சிதற தொடங்கின.

என்ன நடக்கிறது என்பதை அறி வதற்கு முன்னர் நாலாபுறமும் இருந்த மக்கள் மீது பட்டாசு விழுந்து வெடிக் கத் தொடங்கியது. சம்பவத்தை பார்த்த சிலர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருந்த மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இருப்பினும் தீ காயம் தீவிர மாக இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சாமி ஊர்வலத்தில் பட்டாசு விபத்து ஏற்பட்டு 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள சம்பவம் மீஞ்சூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *