சென்னை,டிச.16- புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார் கள்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
புதிய நாடாளு மன் றத்தில் பலத்த பாது காப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே பா.ஜனதா ஆட்சியில் நாடாளு மன்றம் தாக்குதலுக்கு இறையாகி 9 பேர் பலி யான துயரச் சம்பவம் நடந்த அதே நாளில் மீண்டும் இத்தகைய கொடிய சம்பவம் நிகழ்ந் திருக்கிறது. இது மோடி ஆட்சியின் மீது படிந்த அழிக்க முடியாத கறையாகும்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கான விளக்கத்தை நாடாளு மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், கனி மொழி, சுப்பராயன், ஜோதி மணி உள்ளிட்ட தமிழ்நாட்டின் உறுப் பினர்கள் 6 பேர் உள்பட நாடாளுமன்ற உறுப் பினர்கள் 14 பேர் முழு வதும் இடைநீக்கம் செய் யப்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், கலர் குண்டு தாக்குதலில் ஈடு பட்டவருக்கு மக்கள வைக்கு உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு வழங் கிய மைசூர் பா.ஜனதா மக்களவை உறுப்பினர் பிரதாப் சின்கா மீது இதுவரை எந்த விசார ணையும் மேற்கொள்ள வில்லை.
மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியைப் போலச் செயல்படுவதால் தான் நாடாளுமன்றம் இத்தகைய தாக்குதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பேராபத் தில் இருந்து இந்தியாவை மீட்பதற்கு ஜனநாயகத் தில் நம்பிக்கையுள்ளவர் கள் அனைவரும் ஓரணி யில் திரள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.