யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுகிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள்!

viduthalai
8 Min Read

சம வாய்ப்பு வேண்டும் – ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்பவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்!
யார் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்!
சென்னை பல்கலைக் கழகம்: ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்!

சென்னை, டிச.16 யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுகிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள். இதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு முரண்பாடு போன்று தோன்றலாம். விசித்திரமாகவும் தோன்றலாம். சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள், சம வாய்ப்பு வேண்டும் என்று சொல்லுகிறவர்கள், ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்லுகிறவர்கள், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அதேநேரத்தில், யார் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஜாதிவாரிக் கணக் கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பல்கலைக் கழகம் அண்ணா பொதுவாழ்வியல் மய்யம் சார்பில் சென்னை பல்கலைக் கழகத்தில்
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கம்!”
கடந்த 30.11.2023 அன்று காலை சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் அரங்கில் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத் தரங்கிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:

மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக…
மிகுந்த எழுச்சியோடு, விவரங்களோடு, ஆதா ரங்களோடு சென்னை பல்கலைக் கழகத்தின் அண்ணா பொதுவாழ்வியல் மய்யம் சார்பாக நடத்தப்படக் கூடிய இந்நிகழ்ச்சி மிகத் தேவையான நேரத்தில், சரியானவர்களைக் கொண்டு, தெளி வான புள்ளிவிவரங்களைத் தந்து, அருமையான மக்கள் முன், ஆய்வாளர்கள் முன், பேராசிரியர்கள் முன் – கருத்துப் பரிமாற்றம் செய்து -யாரிடம் இந்தக் கருத்துகள் போய்ச் சேரவேண்டுமோ – அந்த அற்புதமான கருத்துகளை – அதையொட்டி மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கருத்தரங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
‘‘ஜாதி வாரிக் கணக்கெடுப்பு” அவசியம், ஏன் என் பதை மய்யப்படுத்தி நடத்தப்படக்கூடிய கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, மிகச் சிறப்பாக நம் அனைவரையும் வரவேற்று இருக்கக்கூடிய அண்ணா பொது வாழ்வியல் மய்யத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் அவர்களே,

அன்றும் – இன்றும் – என்றும்
சமூகநீதிப் போராளி!
இக்கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்து உரை யாற்றிய பேராசிரியரும், இப்பல்கலைக் கழகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியவரும், அன்றும் – இன்றும் – என்றும் சமூகநீதிப் போராளியாகவும் இருக் கக்கூடிய அருமைத் தோழர் பேராசிரியர் முனைவர் நாகநாதன் அவர்களே,
அதுபோலவே, அவர் இங்கே ஒரு சிறந்த ஆய் வுரையை புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொன்னார். அந்த உரையின் ஒரு வரியையும் யாராலும் மறுக்க முடியாது – மறக்க முடியாது – ஆதாரப்பூர்வமானதாகும். அதிக நேரம் எடுத்துக்கொண்டார் என்று நினைக்க முடியாத அளவிற்கு, அவர் உரையை முடித்துவிட்டாரே, இன்னும் பல புள்ளிவிவரங்களைச் சொல்லியிருக்கலாமே என்றுதான் என்னைப் போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். இன்னுங்கேட்டால், அவர் உரை யோடு இந்தக் கூட்டம் முடிந்திருக்கவேண்டும். என்னு டைய உரை என்பது இன்னொரு நாளில்கூட ஏற்பாடு செய்திருக்கலாம். ஏனென்றால், அவர் வரைந்திருக்கின்ற ஓவியத்தை நான் கலைக்க விரும்பவில்லை. அவர் உண்டாக்கிய எழுச்சியை, மேலும் மேலும் உண்டாக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தப் பல்கலைக் கழகத்தினுடைய மேனாள் பதிவாளர் – பிறகு அவர் துணைவேந்தராக, பல்வேறு பொறுப்புகளில், ஆட்சி மன்றப் பொறுப்புகளில் இருந்தவர். எதைப் பேசினாலும், ஆழமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் எடுத்துச் சொல்லக் கூடியவர்.

‘‘பவர் பாயிண்ட் பிரசன்டேசன்’’மூலம்
பல தகவல்களை எடுத்துச் சொன்னார்!
முன்னுரை போல, பீடிகைபோல நம்முடைய பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் பல செய்திகளை எடுத்துச் சொன்னார். அதையொட்டி அவர்கள் ‘‘பவர் பாயிண்ட் பிரசன்டேசன்” என்று சொல்லக்கூடிய புள்ளிவிவரங்களோடு பல செய்திகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். கடைசியில் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை – மேற்கோளை எடுத்துக்காட்டினார்.
‘‘அப்படியே நீங்கள் பேசாமல் இருந்தால் என்னாகும் என்று சொன்னால், ஒரு காலத்தில் கேட்பவர்கள், சிந்திக் கின்றவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். தங்களைத் தாங்களே இழந்து கொள்ளுவதற்குக்கூட அவர்கள் தயாராக இருப்பார்கள்” என்று சொன்ன கடைசி வாக்கியம் இருக்கிறதே, அதை எத்தனை பேர் நீங்கள் மனதில் கொண்டீர்கள் என்று தெரியாது. அதை வைத் துக்கூட நாளைக்கு அவர்மீது வழக்குப் போட்டாலும் அது அதிசயமில்லை.

உண்மை எப்பொழுதுமே கசப்பாகத்தான் இருக்கும்; உண்மை எப்பொழுதுமே வெளியில் வெளிச்சத்தைத் தராது!
வாதாடுவதற்கு மேனாள் நீதிபதியும் இருக்கிறார்கள்; திறமையுள்ள வழக்குரைஞர் தோழர்களும் இருக் கிறார்கள். உண்மை எப்பொழுதுமே கசப்பாகத்தான் இருக்கும். உண்மை எப்பொழுதுமே வெளியில் வெளிச் சத்தைத் தராது முதலில் – அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பான உரையைத் தந்திருக்கிறார்கள்.

உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்!
‘‘To Speak wider auidence” என்று ஆங் கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. இந்த நிகழ்ச் சியை இங்கே இருப்பவர்கள் மட்டும் பார்த்துக் கொண்டோ, கேட்டுக்கொண்டே இல்லை- பெரியார் வலைக்காட்சியின்மூலமாக இந்நிகழ் வினை உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ள வர்கள் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் ஒரு நிரந்தர மான, ஆதாரப்பூர்வமானவையாகும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பினுடைய தேவை என்ன என்பதை வலியுறுத்துவதற்கு ஓர் அடித் தளமான காரணங்களைக் கொடுப்பதற்கு – மிக முக்கியமான ஓர் அனுபவம் உள்ள – ஆளுமை நிறைந்த பிரபலமான ஒருவர் – கல்வித் துறையில் பணியாற்றிய ஒருவர் இதைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறார்.

ஆங்கிலத்திலும் – தமிழிலும் வெளியிடப்படும்!
மத்திய பல்கலைக் கழகங்களுடைய நிலை என்ன? உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் நிலை என்ன? என்று விளக்கிச் சொல்லக்கூடிய அள விற்கு வந்திருக்கக் கூடிய அய்யா அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ். அவர்களுடைய உரை ஒரு தனி நூலாக விரைவில் எங்களால் வெளியிடப்படும் ஆங்கிலத்திலும் – தமிழிலும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய உரையில் இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டி இருக்கிறது. நேரத்தின் நெருக்கடியினால் அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதை விரைவாகக் கொடுத்தால், அதைப் பரப்பவேண்டியது எங்களைப் போன்றவர்களின் வேலை.

எந்த விலையை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு…
இவர்களைப் போன்றவர்கள் தகவல்களைக் கொடுக்கவேண்டும் – எங்களைப் போன்றவர்கள் மக் களிடம் சென்று பரப்பவேண்டும். அந்தப் பணியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். அதற்காக எந்த விலையை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு எங் களைப் போன்றவர்கள் தயாராக இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் நூறு, இரு நூறு பேருக்கு சமமானவர்கள்!
இன்று காலையில் புயல், மழையால், சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற செய்தியைப் பார்த்த வுடன், இந்தக் கூட்டம் நடைபெறுமா? என்று நினைத் தேன். ஆனால், இங்கே வந்து பார்த்தால், இங்கே வந்திருக்கும் கூட்டத்திற்கு நாற்காலிகள் போதவில்லை என்ற நிலைதான். இங்கே வந்திருக்கின்றவர்கள் ஒவ் வொருவரும் நூறு, இரு நூறு பேருக்கு சமமானவர்கள் போன்று பரப்பக்கூடிய அளவிற்கு, ஆய்வாளர்களாக, அறிஞர்களாக, அறிவார்ந்த அரங்கினர்களாக இருக் கிறீர்கள்.
ஆகவே, இந்தக் கருத்துகள் இன்றைக்கு மிகவும் தேவையான கருத்துகளாகும். அவர் சொன்னதை – முன் மொழிந்ததை, நான் அப்படியே வழிமொழிந்ததைப்போல, அடுத்தக்கட்டத்திற்கு செல்ல விரும்புகிறேன்.
எனவே, இருவர் உரை, அவர்கள் சொன்ன அத் துணை வாதங்களும், புள்ளிவிவரங்களும் ஒவ்வொன் றும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை – மறுக்க முடியாதவை. நம்முடைய முனைவர் கலைச்செல்வி அவர்களும் அற்புதமாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்தத் துறையினர் மிகப் பயனுள்ள ஒரு பணியைச் செய்திருக்கிறீர்கள் என்பதற்காகப் பாராட்டி, வாழ்த்தி, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் ஏன்?’’
என்ற சிறிய புத்தகம்!
அதற்கு முன்பாக, இந்தப் பிரச்சினை தொடங்கியதும், ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டோம். ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் ஏன்?” என்று
ஏனென்றால், பெரிய பெரிய புத்தகங்களாக வெளி யிட்டால், பலர் வாங்குகிறார்கள். அதைப் படிப்பதில்லை. அதேநேரத்தில், படித்து மனதிலே நிறுத்திக் கொள் வார்கள் – அதைப் பரப்பவேண்டும் என்பதற்காகத்தான் சிறு புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறோம். அந்தப் புத்தகங்கள் இங்கே கிடைக்கும் – அதை நீங்கள் வாங்கிப் பார்க்கலாம்.
சுருக்கமாக உங்கள்முன் ஒன்றிரண்டு கருத்தை மட்டும் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

ஜாதி உணர்வு வந்துவிட்டதா? என்ற
கேள்வி எழும்!
இங்கே வந்திருக்கின்ற எங்களைப் பார்த்து, ‘‘ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்பவர்களாயிற்றே இவர் கள்; ஆனால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கிறாரே! அப்படியென்றால், ஜாதியை இவர்கள் ஞாபகப்படுத்துகிறாரே, ஜாதியை நிலை நிறுத்துகிறாரே, இவர் மாறிவிட்டாரா? இவருக்கு ஜாதிவெறி வந்துவிட்டதா?” என்கின்ற எண்ணம் எழக்கூடும். ஜாதி உணர்வு வந்துவிட்டதா?” என்ற கேள்வி உங்களில் சிலருக்கு இருக்கும்.
அந்தக் கேள்வியை- நியாயமான சந்தேகத்தைத் தீர்க்கவேண்டியது எங்களுடைய இன்றியமையாத கடமையாகும்.
தூங்குகின்றவர்களைப் போன்று பாசாங்கு செய்ப வர்களைப்பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்படு வதில்லை.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்பவர்கள் யார்?
ஆகவே, ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இந்தக் கருத்தில் சந்தேகம் இருக்கின்றவர்களைப் பார்த்துக் கேட்கிறோம் – யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருது கிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக் கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள்.
இதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு முரண் பாடு போன்று தோன்றலாம். விசித்திரமாகவும் தோன்றலாம்.
சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள்,
சம வாய்ப்பு வேண்டும் என்று சொல்லுகிற வர்கள்,
ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்லுகிறவர்கள், ஜாதிவாரிக் கணக் கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அதேநேரத்தில், யார் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று
தங்களை காட்டிக் கொள்கிறார்கள்!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும்கூட, இன்னமும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடாது – ஆண்டவன் அருகே உள்ளே போகக் கூடாது என்பதற்கு – இது போதாது, அது போதாது என்று சொல்லிக்கொண்டு, யார் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தங்களை ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று காட்டிக் கொண் டிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், எங்களைப் போன்ற பெரியார் மாணவர்கள், பெரியார் சீடர்கள், திராவிட இயக்கத்தவர்கள், ஜாதி ஒழிப்புக்காரர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் அவர்கள் எல்லா அமைப்புகளிலும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களாகிய நாங்கள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், சமூகநீதிதான்.

சமூகநீதியின் மூலமாகத்தான்
எதையும் செய்ய முடியும்!
சமூகநீதியின் மூலமாகத்தான் எதையும் செய்ய முடியும். ஜாதி ஒழியவேண்டும் என்று சொன்னால், சமத்துவம் வரவேண்டும். ஆனால், இன்றைக்கு சமத்துவம் இல்லையே!
அதை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், ஒன்றே ஒன்று – ஜாதியை நாம் இப்போது புதிதாக இதன்மூலமாக ஜாதியை அறிமுகப்படுத்தவோ, ஜாதியைக் காப் பாற்றவோ வரவில்லை. ஜாதி எல்லா இடங்களிலும் இருக்கிறது; ஜாதி நடைமுறையில் இருக்கிறது.
(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *