அலிகர் நகரில் கடந்த 8.12.2023 அன்று கடவுச் சீட்டு விண்ணப்பத்திற்கு காவல்துறை ஒப்புதலுக்காக வந்த இஸ்லாமியப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பார்ப்பன காவல்துறை அதிகாரியை கைது செய்யாமல் அறிக்கை மேல் அறிக்கை கொடுத்து வருகிறது உத்தரப்பிரதேச காவல்துறை.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஷ்ரத். இவர் சவூதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக கடவுச் சீட்டு பெறவும் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே, அலிகாரில் உள்ள காவல் நிலையத்தில் இஷ்ரத்தின் கடவுச் சீட்டு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடவுச் சீட்டு ஆவணங்கள் சரிபார்ப்பிற்காக இஷ்ரத் டிச.8 அலிகார் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.
கடவுச் சீட்டு விசாரணையின்போது மனோஜ் சர்மா என்ற காவல்துறை ஆய்வாளர் கடவுச் சீட்டு கேட்டு வந்த பெண் இஸ்லாமியர் என்பதால் அவர் முன்பு துப்பாக்கியைக் காட்டி ஏதோ பேசியுள்ளார். பேசிக்கொண்டு இருக்கும் போதே உடனடியாக துப்பாக்கியை காவல்துறை அதிகாரி இயக்கியுள்ளார். இதனால் தலையில் குண்டுபாய்ந்த நிலையில் இர்ஷத் கோமா நிலைக்குச்சென்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்
துப்பாக்கியால் சுடப்பட்டு விசாரணை நடந்துகொண்டு இருக்கும் போதே குற்றவாளி மனோஷ் சர்மாவை கைதுசெய்யாமல் அவரை தற்காலிக பணி நீக்கம் மட்டுமே செய்துவைத்தனர். இந்த நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையிலும் குற்றவாளியை கைதுசெய்யாமல் இருந்துவிட்டார்கள்
இது குறித்து அலிகார் மாவட்ட காவல்துறை ஆணையர் கூறும் போது, துப்பாக்கியால் சுட்ட காவல்துறை அதிகாரி தலைமறைவாகிவிட்டார் என்றும் அவர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசாக தரப்படும் என்று கூறியுள்ளார். பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து காவலில் வைப்பதுதான் வழக்கம் ஆனால் குற்றவாளி பார்ப்பனர் என்பதற்காக அவரை கைதுசெய்யாமல் காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் பெண் மரணமடையும் வரை காத்திருந்து – அவரை தப்ப விட்டு, தற்போது அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்தது நகைப்பிற்குரியதாக உள்ளது
இன்றும் மறைமுகமாக குறிப்பாக வட இந்தியாவில் மனுதர்மம் தான் சட்டமாக உள்ளது என்பதற்கு இது போன்ற பல நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.