‘நீட்’ தேர்வு எழுதினாலே போதும் ராஜஸ்தானில் கால்நடை மருத்துவம் படிக்கலாம்

Viduthalai
1 Min Read

சென்னை, அக். 23- ராஜஸ் தான், ஹாசன்பூரில் ஆர். ஆர்.கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மய்யம் செயல் பட்டு வருகிறது. கால் நடை மருத்துவமனையு டன் அமைந்துள்ள இங்கு இக்கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. 

இங்கு அய்ந்தரை ஆண்டு பிவிஎஸ்சி மற் றும் ஏஎச் எனும் கால் நடை மருத்துவப் படிப் புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலி ருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த கல்வி யாண்டில் சேர்ந்துள்ள னர். குறிப்பாக தமிழ்நாட் டைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சேர்ந் துள்ளனர். இந்த படிப் பில் சேர 12ஆ-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும்; தேர்ச்சி தேவையில்லை. கால்நடை மருத் துவம் படித்தால் அரசு மற்றும் அரசு சாரா நிறு வனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர் ஆகிய ஒன்றிய மாநில அரசு வேலைகளில் சேரலாம். மேலும் உள் நாடு, வெளிநாடு வேலை வாய்ப்புகளும் உள்ளன. இந்த கால்நடை மருத்து வக் கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளன. தென் னிந்திய உணவு வழங்கப் படுகிறது.

கல்லூரிக் கட்டணம் மற்றும் விடுதி உட்பட ஆண்டு கட்டணம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இந்தக் கல்லூரி யில் சேர வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவ, மாணவி கள் தென்னிந்திய சேர்க்கை அலுவலகம் பெங்களூரு, தருமபுரி, ஈரோடு, சென்னை ஆகிய பல்வேறு பகுதி களில் செயல்பட்டு வரும் ஆர்.ஆர்.கால்நடை மருத் துவக் கல்லூரி சேர்க்கை மய்யத்தை தொடர்பு கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு www.rrvetcollege.org  இணையதளத்தைக் காணலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *