கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்து

1 Min Read

அரசியல்

சிதம்பரம் நகர திராவிடர் கழக தலைவர் கோவி.குணசேகரன் மகள் அம்மு என்கிற சரண்யா குருங்குடி தியாகராஜன்-ராசாயாள் ஆகியோர் மகன் செல்வேந்திரன் மண விழா 20.10.2023 அன்று காட்டுமன்னார்குடியில் நடைபெற்றது. அவர்களின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி சிதம்பரம் பொன்னம்பலம் திருமண மண்டபத்தில் 21.10.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட கழக செயலாளர் அன்பு சித்தார்த்தன், நகர கழக அமைப்பாளர் செல்வரத்தினம், மேனாள் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், மேனாள் சிதம்பரம் நகர செயலாளர் கோவி.சுந்தரமூர்த்தி, பு.தா.அருள்மொழி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய அமைப்பாளர் சேகர் ஆகியோர் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்தும் அளிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *