ஜாதி மறுப்பு திருமணம்

0 Min Read

அரசியல்

செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் பகுதி கழகத் தலைவர் கி.நீலகண்டன்- நீ.பவானி இணையர் மகன் நீ.தமிழன்பனுக்கும் திருவள்ளூர் மாவட்டம், புதுமாவிலங்கை, எல்லப்பன் – எ.ஜக்கம்மாள் இணையர் மகள் எ.மோனிஷாவுக்கும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் 20.10.2023 அன்று தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய பொறுப்பாளர் க.இசைஇன்பன் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. பேரமனூர் பகுதி கழக செயலாளர் சு.விஜயராகவன் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர். பிறகு திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *