கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் – உஷார்! உஷார்!! (3)
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.12.2023 அன்றைய தொடர்ச்சி…
அர்ச்சகப் பார்ப்பனர்களின்
கர்ப்பகிரக மோசடி அம்பலம்
கோயில் கர்ப்பகிரகத்திற்குள் மற்றவர்கள் நுழையக் கூடாது என்று பித்தலாட்டம் செய்து கொண்டு வருவது, அர்ச்சகப் பார்ப்பனர்கள் எவ்வளவெல்லாம் மோசடி செய்வதற்கு உதவுகிறது என்பதற்கோர் எடுத்துக்காட்டாக மாயூரம் அருகில் ஒரு நிகழ்வு நடந் துள்ளது. தாம் பூஜை செய்து வந்த சாமி சிலையையே ஓர் அர்ச்சகப் பார்ப்பனரும் மற்றும் சில பார்ப்பனர் களும் திருடிக் கொண்டு அதற்குப் பதிலாக மண்சிலை செய்து வைத்திருக்கின்றனர். ரூ. 20 ஆயிரம் பெறும் இச்சிலைத் திருட்டு பற்றி காவல்துறையினர் கண்டு பிடித்து சம்பந்தப்பட்ட இரண்டு பார்ப்பனர்களையும், ஒரு பார்ப்பனத்தியையும் கைது செய்துள்ளனர்.
மாயூரம் வட்ட திருக்கடையூரை அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன் கோவிலின் சத்திய வாசகர் சவுந்திர நாயகி, பிடாரியம்மன் ஆகிய சாமி சிலைகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாக மண்சிலை செய்து வைத்து விட்டனராம் இராமு என்ற அந்தக் கோயிலின் அர்ச்சகப் பார்ப்பனர். இத்திருட்டில் அவர் மனைவி மகாலட்சுமியும், குடவாசல் கோவிலின் குருக்களாக உள்ள கந்தன் (இராமு மைத்துனன்) என்ற பார்ப்பனரும் சம்பந்தப்பட்டிருப்பது பின்னர் தெரிய வந்தது. சிலையை மாற்றி எடுத்து வரும்பொழுது குடவாசலைச் சேர்ந்த பார்ப்பனக் குருக்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இது சம்பந்தமாக விசேடப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டதன் பேரில் மாத்தூர் கோவிலில் வந்து பார்க்கும்போது மண் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக கோயில் குருக்கள் இராமு, அவர் மனைவி மகாலட்சுமி, அவர் மைத்துனன் கந்தன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப் பட்ட சிலைகளின் மதிப்பு சுமார் 20,000 ரூபாய் இருக் கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிலை திருட்டுப் பற்றியும், அர்ச்சகப் பார்ப்பனர்களின் இது போன்ற மோசடிகளையும் அம்பலப்படுத்தி, திருக்கடை யூர் பகுத்தறிவாளர் கழகம் பொதுமக்களுக்கு நல்ல அளவுக்கு உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
(‘விடுதலை’ 19.11.1973)
திருக்குணவாயிற் கோயிலில் ஒரு பெருந்திருட்டுப் போயிற்று. கோயில் அதிகாரிகள் பெருந் திருவிழா விற்காக நகைகளை எடுக்க சிறீ பண்டாரத்தைத் திறந் தார்கள். விலையுயர்ந்த நகைகளைக் காணவில்லை. இவைகள் பத்து ஆண்டுகளுக்கு முந்தித்தான் பூண்டி ஜமீன்தாரராலும், ப.ழ.பெ.ந. இராமன் செட்டியாராலும் செய்துத் தரப்பட்டன. இக்களவு உடனே காவல் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் இரண்டு மாதம் வரை துப்பு ஆராய்ந்தார்கள். இறுதியில் ஒரு பழைய திருடன் வீட்டைச் சோதனை போட்டதில் ஒரு சில கோயில் நகைகள் கிடைத்தன. அவனை அடித்து நொறுக்கியதில் அவை பொன்னப்பா பத்தர் மூலமாகத் தனக்குக் கிடைத்தன என்று சொல்லி விட்டான். பொன்னப்பா பத்தரைக் கைதுசெய்து விசாரித்ததில், வைத்தியநாத கனபாடிகள் சில தங்க நகைகளைத் தந்து உருக்கச் சொல்லிக் கைவளை யல்களாக்கிக் கொண்டு போனார் என்று சொன்னார். மறுபடி இதே துறையில் காவல்துறையினர் விசாரிக்கை யில் திருப்பனைத்துறை மடத்தார் வைத்து நடத்தும் அன்னதானக் கட்டளைக் கணக்குப் பிள்ளை சொக்கப்பா பிள்ளையும், வைத்திய நாத கனபாடிகளும், பொன்னப்பா பத்தரும் சேர்ந்து இக்களவைச் செய் திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் முடிவுக்கு வந்தார்கள். போதுமான சான்றுகள் கிடைக்காததனால், பொன்னப்பா பத்தரை விட்டு விடுவதாக ஆசை காட்டியதில் அவன் சர்க்கார்ச் சாட்சியாக வருவதற்கு இசைந்தான். ஆகவே, சொக்கப்பா பிள்ளையையும் வைத்தியநாத கனபாடி களையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்ற வழக்குத் தொடங்கினார்கள்.
இதில் சொக்கப்பாவுக்கு ஓர் ஆயுளும், கனாபடி களுக்கு (பார்ப்பனர்களுக்கு) 9 மாதச் சிறையும் அளிக் கப்பட்டது. (கோவூர் கிழார் எழுதிய கோயிற்பூனைகள்)
‘இல்லஸ்டிரேட்ட வீக்லி’ இதழில் (03.09.1972) ‘இந்தர் மல்ஹோத்ரா’ கட்டுரை ஒன்றை ஆதாரப் பூர்வமாகத் தீட்டியிருந்தார். கோயில் கொள்ளைகளைப் பற்றிய கட்டுரை அது. அதனை மொழிபெயர்த்து ‘விடுதலை’ தொடர்ச்சியாக 14 கட்டுரைகளை வெளியிட்டது. (செப்டம்பர் 1972)
சிலைகளைக் கடத்துவதில் கோயில் அர்ச்சகர்களின் பங்களிப்பு குறித்து அதில் ஆதாரப்பூர்வமாக விளக்கப் பட்டு இருந்தது.
1960இல் திருவாங்கூர் சமஸ்தான மேனாள் திவான் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அரசு ஒரு விசாரணை ஆணையத்தை (கமிஷன்) நியமித்தது.
கோயில்களில் நடக்கும் அயோக்கியத்தனங்கள், அத்துமீறல்கள், ஒழுக்கக் கேடுகள், தற்குறிகளான பார்ப்பன அர்ச்சகர்களைப் பற்றி எல்லாம் வண்டி வண்டியாகக் கூறப்பட்டு இருந்தது.
கோயில் பணத்தை எடுத்து பங்கு சந்தையில் ஈடுபட்ட பார்ப்பன அர்ச்சகர்கள் பற்றி எல்லாம் கூட அந்த ஆணையம் அதிகாரபூர்வமாக விளக்கியுள்ளது.
கி.பி.எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகப்பட்டினத்துப் பவுத்த விகாரை ஒன்றில் முழுவதும் பொன்னால் அமைக்கப் பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்து கொண்டு போய், அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத் தொண்டுகளைச் செய்தார் என்பது குரு பரம்பரைப் பிரபாவம் முதலிய வைணவ நூல்களினால் தெரிய வருகின்றது.
(‘பவுத்தமும் தமிழும்’ பக்கம் 47-,48, ஆசிரியர் மயிலை சீனி.வெங்கடசாமி)
கோயிற் கொள்ளை
பல கோயில்கள் தங்களுக்கு ஏராளமான செல்வம் படைத்தவையாக இருந்தாலும், பெருமளவில் காணிக்கை வந்து குவிந்தாலும்கூட அதன் கணக்குப் புத்தகங்களைப் பரிசீலித்துப் பார்த்தால் அவை ஏழைக் கோயில்களாகவே இருக்கின்றன. இதில் வியப்படை வதற்கு ஏதுமில்லை.
இத்தகைய கடுமையான முறைகளுக்குப் பொறுப் பாக உள்ள டிரஸ்டிகளும், மகந்துகளும், பூசாரிகளும், அர்ச்சகர்களும் ஒன்று தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை கல்வியறிவு படைத்தவர்களாக இருக்கின்றார்கள். அத்துடன் வழக்கமாகவே பணம் பறிக்கும் ஆசாமிகளாக இருக்கிறார்கள்.
கடவுளின் சொத்துகளையும், பணத்தையும் கையாடல் செய்தது, தப்பு வழியில் பயன்படுத்தியது பற்றிய புகார் அல்லது கண்டுபிடிப்பு பற்றிய குறிப்பிட்ட தகவல்களைப் பட்டியல் போட்டுக் காட்டினால் அது ஒரு தனிப் புத்தகமாகவே நிரம்பிவிடும். ஆனால், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒன்றை இங்கே மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
பழைமையானதும், புகழ்பெற்றதுமான காசி விசுவ நாதர் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பிட்ட சில மகந்து, பண்டாக்களின் பரம்பரைச் சொத்தாக, உரிமை கொண்டாடப்படுகிறது. இவர்கள் தங்கள் குடும்பங்களை நிர்வகிக்க நிர்வாகக் கமிட்டி ஒன்றை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். காணிக்கைகள் யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய வியாஜ்ஜியம் இவர்களுக்குகிடையே கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. அறக்கட்டளைச் சொத்துகள் மூலமும், காணிக்கை களின் மூலமும் கோயிலுக்கு வரும் வருமானம் முறைப்படி கணக்கெழுதப்படவில்லை என்று ஏராளமான சாட்சிகள் உறுதிப்படுத்தினார்கள்
எல்லாக் கோயில்களிலும் இதுவே கதை.
தேவைக்கான பூஜைக்குரிய செலவுகளைக் கழித் துக் கொண்ட பிறகு, காணிக்கைகள் 4 குடும்பங் களிடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. சம்பிரதா யத்தின் அடிப்படையிலும், சிறீ கிருஷ்ணதாஸ் என்ப வரால் எழுதப்பட்டு , 1937ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட விசுவநாத தரிசனம் என்ற நூலில் குறிப்பிட்டி ருக்கும் வழக்கத்தின் அடிப்படையிலும் இவர்கள் இவ்வாறு பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
கோயில் விவகாரம் இங்கே மட்டும்தான் இப்படி என்பதில்லை. அரித்துவாரம், காசி, விந்தியாச்சல், கயா, தேவைகார், பூரி மற்றும் புவனேஸ்வரம் ஆகிய புகழ்பெற்ற மத ஸ்தலங்களில் உள்ள கோயில்களில் பெரும்பான்மையாகக் காணிக்கைகளின்மீது கட்டுப் பாடு விதிக்கவும், பரம்பரை பாத்தியதை கோரவுமான உரிமை பண்டாக்களுக்கே இருக்கிறது.
(சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையிலிருந்து)
இப்படிக் கோயில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கி ஏப்பமிட்டவர்கள் மீண்டும் நாக்கை நீட்டிக்கொண்டு அலைகிறார்கள். இந்து கோயில்களை அரசு பிடியிலிருந்து விடுவித்து தாங்கள் வயிற்றில் அள்ளிக்கட்டத் துடிக்கிறார்கள். உஷார்! உஷார்!!
– முற்றும்
யார் இந்த ஜக்கி வாசுதேவ்?
கோயில்கள் இந்து அறநிலையத் துறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற கூக்குரலில் தலைமை வகித்து முட்டாசு கட்டும் இந்த ஜக்கி வாசுதேவ் யார்? அவர்மீது என்னென்ன வழக்குகள் உள்ளன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது முக்கியம்.
கோவையில் 13.12.2011 அன்று தன்மீதுள்ள குற்றச் சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பை இவரே ஏற்பாடு செய்தார். அதில் 25 பத்திரிகை யாளர்கள் கலந்து கொண்டனர். அந்தச் சந்திப்பில் கேட் கப்பட்ட கேள்விகளின் விவரம்:
1. உங்கள் யோகா மய்யத்தில் வெளிநாட்டில் தேடப் பட்டுவரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது, உண்மையா?
2. யோகா மய்யத்திற்குள்ளும், உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும், வெளிப்புற மரங் களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?
3. உங்கள் பெயர் ஜாவா வாசுதேவ் என்பதை எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?
4. 1970ஆம் ஆண்டு கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா? என்று கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளிக்காது மவுனமாக இருந்த போது மீண்டும் ஊடகவியலாளர்கள் அதே கேள்விகளைக் கேட்க – அவரது ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கினார்கள்.
இந்த தாக்குதல் தொடர்பாக தமிழ்நாடு பத்திரிகை யாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்திய மறுநாள் (14.12.2011) அன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஈஷா மய்யம் ஜக்கிவாசுதேவ் மீது புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு கோவை மாநகர காவல்துறை ஆணையர் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் ஈஷா யோகா மய்யம் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல் நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். புகாரின் பதிவு எண்.433/1808. என்ன ஆயிற்று என்பதே தெரியவில்லை.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவரின் பொருளாதார ஆய்வறிக்கையின் 32ஆம் பக்கம் என்ன சொல்லுகிறது? யானைக் காப்பகங்களில் நகர மயமாக்கல் என் ற தலைப்பில் ஜக்கி வாசுதேவின் நில அபகரிப்புப் பற்றி, விதி மீறல்கள் பற்றி விரிவாகக் கூறப்படவில்லையா?
யானைகளின் வழித்தடங்களில் யோகா பயிற்சி மய்யக் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? அரசு வழங் கிய 44.3 ஏக்கர் பட்டா நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்கள் விரட்டப்பட்டது எப்படி?
2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, 11973 சதுர மீட்டர் பரப்பளவு விளை நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது சாமியார் ஜக்கியால்.
இத்தகைய சட்ட விரோத நடவடிக்கையில் ஈடு பட்டுள்ள குற்றவாளியின் அழைப்பின் பெயரில் அவர் நடத்தும் விழாக்களுக்கு பிரதமர் வருகிறார் – குடியரசுத் தலைவர் வருகிறார் – மாநில முதல் அமைச்சர் வருகிறார் – அந்த ஜக்கி சாமியாரிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள் என்றால் இந்த அவலத்தை என்ன சொல்ல?
அடித்த கொள்ளைகள் போதாது என்று இப்பொழுது கோயில்களை அரசிடமிருந்து விடுவித்து அதிலும் புகுந்து விளையாடலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டு அலைகிறார்கள் – எச்சரிக்கை!