கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

• நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளி : இதுவரை 14 எம்.பி.க்கள் கூண்டோடு இடைநீக்கம்!
• மக்களவைக்கு வராத திமுக எம்.பி. பார்த்திபனும் இடைநீக்கம்; தவறை உணர்ந்து திரும்பப் பெற்றார் சபாநாயகர்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

• சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது; தனி நபர்களுக்கு அல்ல, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
• தமிழ்நாடு அரசின் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை வருகிற 18ஆம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
• எம்.பி. பதவி நீக்கப்பட்ட மஹூவா தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை.
• கோவா விமான நிலையத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் பயணியிடம் ஹிந்தி கற்க வேண்டும் என்று பாதுகாப்பு படை வீரர் பாடம் எடுத்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

• மூத்த நீதிபதிகளினால் தனக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தர பிரதேச பெண் நீதிபதி கண்ணீர் கடிதம்.
• இடஒதுக்கீடு என்பது நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களை அணுகுவதற்கான ஒரு கருவியாகும். ஜாதி பாகுபாடு நீடிக்கும் வரை, ஜாதி அடிப்படையிலான உறுதியான நடவடிக்கையை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் கட்டுரையாளர் பேராசிரியர் அதீதி நாராயணி பஸ்வான்.
தி டெலிகிராப்:
• அசைவ உணவு விற்பனை கட்டுப்பாடு, வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி வைக்க தடை; இதுவே மத்திய பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்ற மோகன்யாதவின் முதல் அறிவிப்புகள்

டைம்ஸ் ஆப் இந்தியா:

• வாரணாசியில் நிதிஷ் குமாரின் பேரணியை ரத்து செய்த உ.பி அரசு மீது அய்க்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *