புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை கிராமம் அம்பேத்கர் நகரில் வசித்து வந்த ராமன் மகன் அருணாச்சலம் வயது 88 இன்று 15. 12.2023 அதிகாலை 5 மணிக்கு மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமியின் தந்தையும், திராவிடர் கழக நகரத் தலைவர், பெரியார் வாசகர் வட்ட மாவட்ட இணை அமைப்பாளர் ஆன ரெ.மு. தர்மராசு அவர்களின் மைத்துனரும் மாமனாரும் மகளிர் பாசறை மாவட்டச் செயலாளர் நாத்திகா அவர்களின் தாத்தாவும் ஆவார். மறைவுற்ற அருணாச்சலம் அவர்களுக்கு கண்ணாத்தாள் என்ற மனைவியும் அரங்குளவன், ஜெயலட்சுமி, செந்தில் வடிவு, அமுதா ஆகிய பிள்ளைகளும் இருக்கிறார்கள்.