“மக்களுடன் முதலமைச்சர்” திட்டம் கோவையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
3 Min Read

சென்னை, டிச. 15- தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக் கவுள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

“உங்கள் தொகுதியில் முதல மைச்சர்”, “கள ஆய்வில் முதலமைச் சர்” திட்டங்களைத் தொடர்ந்து “மக்களுடன் முதலமைச்சர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் டிச.18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

“மக்களுடன் முதலமைச்சர்“’ என்ற இத்திட்டத்தில், பொதுமக் கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிரா விடர் நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம் பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத் தேசிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வரும் டிச.18-ஆம் தேதி முதல் ஜன.6 வரை அனைத்து மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட் டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவா ரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஜன.31 வரை “மக்களுடன் முதலமைச்சர்” திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
முதற்கட்டமாக, நகர்ப்புறங் களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்ட மாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப் படும்.

இந்த முகாம்களில் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் அனை வரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப் படும் மனுக்கள் அனைத்தும், சம் பந்தப்பட்ட துறைகளால் 30 தினங் களுக்குள் உரிய முறையில் பரிசீ லனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூரில் இத்திட்டத் தினை துவக்கி வைக்கும் அதே நேரத்தில், அமைச்சர்கள் அவர்க ளுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங் களிலும் இம்முகாம்களை தொடங்கி வைக்கவுள்ளனர். இம்முகாம்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப் பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப் பூர்வமாக கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என்று அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *