மதுரை, டிச.15 தரமான கல்வியை பெறும் உரிமை உள்ளதால், பல்கலைக்கழ கம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர மாக நியமிக்க வேண்டு மென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கி பாரதி தாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் ரமேஷ் என்பவர், தனது பணியை வரன்முறை செய்து பணி மூப்பு உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு:
எந்தவொரு சமூகத் தின் வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமானது. ஒரு நாட்டின் சமூக, பொரு ளாதார முன்னேற்றத் திற்கு கல்வி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உயர் கல்வியை வழங்குவதற்கா கத் தான் நாடு முழுவதும் பல்கலைக்கழக அமைப் புகள் உருவாக்கப்பட்டன. இவை, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதற் காகவே நல்ல ஆசிரியர் களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங் குவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சமூக மற்றும் பொருளா தாரரீதியாக பின்தங்கி யோர் மாநில அரசின் நிதியுதவி பெறும்
பல் கலைக்கழகங்க ளையே நாடுகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல் லாவிட்டாலும், அங்கேயே கல்வியை தொடர வேண் டிய கட்டாயம் உள்ளது.
ஒவ்வொருவரும் தரமான கல்வியைப் பெற உரிமை உண்டு. கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. இது தனிமனிதன் மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சியி லும் முக்கிய பங்கு வகிக் கிறது. தரமான கல்விக்கு ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிப்பதே சரியானது. எனவே, பல் கலைக்கழகங்கள், கல்லூ ரிகள் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்களில் நிரந்தர அடிப்படையில் தகுதியான நபர்களை ஆசிரியர் பணியிடங் களில் நிரப்ப வேண்டும். இதற்கு தேவையான நட வடிக்கைகளை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக் கழக மானிய குழு உள் ளிட்டவை மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படை யில் மனுதாரர் மனுவை பரிசீலிக்க வேண்டும். என்று நீதிபதி உத்தர விட்டுள்ளார்.