தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 15- தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணி மாறன், பாபு, எஸ்.குமார், அஞ்சாஸ்பரன், சிவக் குமார், சந்திரன், எஸ். பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமை செய லகத்தில் முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினை சந் தித்து வாழ்த்து பெற்றனர்.

அதேபோல், தமிழ் நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினரான கே.பொன்னுசாமி எம்.எல்.ஏ., புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் வெ.மாறன், ரத்தினசாமி, சரவணன், சாத்துக்குட்டி, க.மல்லிகா, ராமசாமி, வீரலட்சுமி, ராஜசேகரன் செல்வம், குணசேகரன், வ.தெய்வம், அ.பாலாஜி, கா.ராஜவேல், டாக்டர் புஷ்பலீலா ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந் தித்து வாழ்த்து பெற்ற னர்.
இந்த நிகழ்வில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள் பங் கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *