குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் பரிசீலனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

1 Min Read

சென்னை,டிச.15- பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகர், திரு வல்லிக்கேணி பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவா ரணப் பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் குடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங் குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதி லளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புகை குண்டு வீசியவர்கள் நாடாளுமன் றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத் தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது நட வடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று கூறினார்.
மேலும் அவர், பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது. அவர் எப்பொழுதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார். அதனால் பாதுகாப்பை விட்டு விட்டனர் போல என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *