குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் பரிசீலனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

viduthalai
1 Min Read

சென்னை,டிச.15- பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகர், திரு வல்லிக்கேணி பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவா ரணப் பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் குடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங் குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதி லளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புகை குண்டு வீசியவர்கள் நாடாளுமன் றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத் தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது நட வடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று கூறினார்.
மேலும் அவர், பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது. அவர் எப்பொழுதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார். அதனால் பாதுகாப்பை விட்டு விட்டனர் போல என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *