அறங்காவலர் குழுவில் 3 பெண்கள் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

1 Min Read

சென்னை,டிச.14- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை, மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம் பெறச் செய்தது நீதிமன்றத்துக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது எனவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *