அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திண்டுக்கல்,டிச.14-அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்று கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, மூன்று நாட்கள் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி யளித்தது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண் காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு மீது, சொத்துக் குவிப்பு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, பிணை கோரி டிச., 5இல் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை நடுவர் மோகனா தள்ளுபடி செய்தார். டாக்டர் சுரேஷ் பாபுவிடம் 4 மணி நேரம் ரகசிய விசாரணை நடந்தது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அங்கித் திவாரியை மூன்று நாட்கள் தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, இதே நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மதுரை சிறையில் இருந்த அங்கித் திவாரி, நேற்று மதியம், 12:15 மணிக்கு திண்டுக்கல் அழைத்து வரப்பட்டு, நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நடுவர் மோகனா, அங்கித் திவாரியிடம் 45 நிமிடம் விசாரித்தார். இரு தரப்பு வழக்குரைஞர்கள் வாதத்திற்கு பின், நேற்று முதல் நாளை மாலை, 5:00 மணி வரை மூன்று நாட்கள் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி யளித்தார். காவல்துறையினர் அங்கித் திவாரியை விசாரிக்க அழைத்துச் சென்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *