“மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த 3 மாத காலம் தளர்த்திட வேண்டும் ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

viduthalai
2 Min Read

சென்னை,டிச.14- “மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற் றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத் தும் கால அட்ட வணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்மூலம் வலியுறுத்தியுள் ளார்.
தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற் றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் கட னைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று (14-.12-.2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 இலட்சம் குடும்பங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோடு, அவர்களது உடைமை களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டுள்ள முதல மைச்சர், பாதிக்கப்பட்ட பகுதி களில் மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ் வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளா தார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பிற் குள்ளான பலர் / வணிக நிறு வனங்கள் பல்வேறு நோக்கங் களுக்காக வங்கிகளில் கடன் களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர் என்றும், இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்ட வணைகளைத் தளர்த்திட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங் கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத் துவதிலிருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டி யையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனும திக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரச்சினையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் ஒன்றிய நிதி யமைச்சர் தனிப்பட்ட முறை யில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உட னடியாகப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட் டுக் கொண்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *