துணை ராணுவத்தில் காலிப் பணியிடங்கள்

1 Min Read

துணை ராணுவப்படைகளில் ‘கான்ஸ்டபிள்’ பதவி யில் 26,146 இடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) 6174, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.அய்.எப்.,) 11,025, மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.,) 3337, சகஷ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 635, இந்தோ திபெத் எல்லை காவல்துறை (அய்.டி.பி.பி.,) 3189, ஆயுத ரிசர்வ் படை (ஏ.ஆர்.,) 1490, சிறப்பு எல்லைப்படை (எஸ்.எஸ்.எப்.,) 296 என மொத்தம் 26,146 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2024 அடிப்படையில் 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
உயரம்: ஆண் 170 செ.மீ., பெண் 157 செ.மீ.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, உடல் தகுதி தேர்வு. மருத்துவ சோதனை. தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வு மய்யம்: சென்னை, வேலூர், கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100.பெண், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.12.2023
விவரங்களுக்கு: ssc.nic.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *