கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கட்டளைப் பகுதியை சார்ந்த ஸ்டாலின் (வயது 41) நேற்று (23-10-2023) உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் கழகம் நடத்திய போராட்டங் களில் கலந்து கொண்டவர். செய்தியறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கட்டளை வைரவன், கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், அமைப்பாளர் பெரியசாமி, கட்டளை ஊராட்சி தலைவர் சசிகுமார் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
– – – – –
பூந்தமல்லி டி.ஆர்.ஆர்.செங்குட்டுவனின் சகோதரி அ.அருள்மொழி (வயது 69) 2210-2023 அன்று காலை 11 மணிக்கு மரணமடைந்தார். தகவல் அறிந்து ஆவடி மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் கார்த்திக்கேயன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.