மாற்றுத்திறனாளிகளின் உபகரணம் பழுது நீக்க வாய்ப்பு தமிழ்நாடு அரசின் மனிதநேய செயல்பாடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.13 வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள்‌ மற்றும்‌ நலத்திட்ட உதவிகள்‌ வழங்கி வருகிறது. சமீபத்தில்‌ ஏற்பட்ட “மிக்ஜாம்‌” புயல்‌ காரணமாக, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல் பட்டு மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌, வெள் ளத்தினால்‌ பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள்‌ உபயோகப்படுத்தும்‌ உதவி உபகரணங்கள்‌ (இணைப்புச்‌ சக்கரங்கள்‌ பொருத்தப்பட்ட பெட்ரோல்‌ ஸ்கூட்டர்கள்‌, மூன்று சக்கர சைக்கிள்‌, சக்கர நாற்காலி மற்றும்‌ மின்கலனால்‌ இயங்கும்‌ சக்கர நாற்காலி) தண்ணிரில்‌ மூழ்கி சேதமடைந்திருந்தால்‌, அதனை பழுது நீக்கம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.
எனவே, மேற்படி பாதிப்படைந்தவர்கள்‌, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்களின்‌ கீழ்க்கண்ட எண்களில்‌ தொடர்பு கொண்டு உரிய விவ ரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மாற்றுத் திறனாளிகள் :
வடசென்னை – 9499933589
தென் சென்னை – 9499933470
திருவள்ளூர் – 9499933496
காஞ்சிபுரம் – 9499933582
செங்கல்பட்டு – 9499933476
அவ்வாறு பெறப்படும்‌ விவரங்களின்‌ அடிப் படையில்‌, சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு, அதன்‌ மூலம்‌ உபகரணங்கள்‌ பழுது நீக்கம்‌ செய்யப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *