புயல் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசு குழுவினர் நேரில் ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சருடன் நாளை கலந்துரையாடல்

viduthalai
3 Min Read

சென்னை, டிச.13 சென்னை வந்த ஒன்றிய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று ஆய்வு செய்யும் அவர்கள், முதலமைச்சர் மு,க, ஸ்டாலினை நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

வங்கக்கடலில் உருவான ‘மிக் ஜாம்’ புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. மழை, வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி னார். ஆய்வு செய்ய ஒன்றிய குழுவை அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த 7-ஆம் தேதி சென்னைவந்து பாதிப்புகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய உள்துறை அமைத்தது. இதில், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் இருந்து திமான் சிங், ஒன்றிய வேளாண் துறை இணை இயக் குநர் ஏ.கே.சிவ்ஹரே, ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை தலைமை பொறி யாளர் எஸ்.விஜயகுமார், ஒன்றிய எரிசக்தி துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே, ஒன்றிய நிதி செலவின துறை சார்பில் ரங்கநாத் ஆடம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் கடந்த 11ஆ-ம் தேதி இரவு டில்லியில் இருந்து சென்னை வந்தனர். நேற்று (12.12.2023) காலை 10.35 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத் தில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்தனர். பிறகு, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மின்துறை தலைவர் ராஜேஷ் லக்கானி, துறை செயலர்கள் சந்தீப் சக்சேனா (நீர்வளம்), பிரதீப் யாதவ் (நெடுஞ்சாலை), சுப்ரியா சாஹூ (வனம்), பணீந்திரரெட்டி (போக்குவரத்து), மங்கத்ராம் சர்மா (கால்நடை பராமரிப்பு), கார்த்திகேயன் (நகராட்சி நிர்வா கம்) மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு, சேதங்கள், மீட்புப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் வீடியோ, படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது. கூட்டம் பகல் 12.30 மணிக்கு முடிந்தது. பின்னர், ஒன்றிய குழுவின் தலைவர் குணால்சத்யார்த்தி தலைமையில் 3 பேர் தென் சென்னை பகுதிக்கும், பவ்யா பாண்டே உள்ளிட்ட 3 பேர் வட சென்னைக்கும் ஆய்வுக்கு சென்றனர்.

தென்சென்னைக்கு சென்ற குழுவை சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடியும், வட சென்னைக்கு சென்ற குழுவை நகராட்சி நிர்வாகத் துறை செய லர் கார்த்திகேயனும் வழிநடத்தி னர். தென் சென்னையில் வேளச் சேரி, மடிப்பாக்கம், பள்ளிக் கரணை, நாராயணபுரம் ஏரி, துரைப்பாக்கம், ஒக்கியம் மேடு, காரப்பாக்கம், கண்டிகை, கேளம்பாக்கம், மாம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதி களிலும், வட சென்னையில் படாளம், புளியந்தோப்பு, கொசப் பூர், பர்மா நகர் இருளர் காலனி, மணலி திடீர் நகர், சடையான் குப்பம் நெட்டுக்குப்பம் முகத் துவார பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். நேற்று காலை முதல் மாலை வரை ஆய்வு நடந்தது.

சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டா லினை நாளை காலை சந்தித்து ஆலோ சனை நடத்துகின்றனர். பிறகு, டில்லி புறப்பட்டு செல்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *