சென்னை வெள்ளப் பேரிடர் பணிகளில்… “பெரியார் தொண்டறம் அணி” சார்பில் 15,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன! தொடரும் “பெரியார் மருத்துவக் குழுமத்தின்” இலவச சிறப்பு மருத்துவ முகாம்!

2 Min Read

சென்னை டிச.13, சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழை காரணமாக ஏற்பட்ட பாதிப் புகளில், பெரியார் தொண்டறம் அணி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் 36 மணி நேரத்தில், 47 ஆண்டுகளில் இல்லாத 50 செ.மீட்டருக்கும் மேல் பொழிந்த கனமழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை புறநகர்களில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு இயந்திரம் போர்க்கால அடிப்படையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக பெருமளவி லான உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் தவிர்க்கப்பட்டது. மீட்புப் பணிகளும் அரசால் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றதால் மூன்றே நாட்களில் 90 விழுக்காடு பகுதிகள் வழக்கம் போல இயங்கத் தொடங்கிவிட்டன. மற்ற இடங்களி லும் நிவாரணப்பணிகள் அரசால் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டும், படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு தமிழ்நாடு அரசு, மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த வெள்ளப்பேரிடரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட, பெரியார் தொண்டறம் அணி, கடந்த 6 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரையிலுமான 6 நாட் களில் வேறு யாரும் செல்லத் துணியாத, இடுப்பளவு தண்ணீரில் சென்று அங்கிருக்கும் 15,000 மக் களின் பசியைத் தணித்திருக்கின் றனர். உணவு, பிஸ்கட், ரொட்டி, தண்ணீர் ஆகியவற்றை வழங்கி யது. 12 ஆம் தேதி, உணவு தயா ரிப்பை கைவிட்டு மற்ற பணிகளை முன்னெடுத்த நிலையிலும் 1000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு தேவை இருப்பதாக அழைப்பு வந்ததால் 2000 நபர் களுக்கு உணவு தயாரிக்கப்பட்டு, பெத்தேல் நகர், அயனாவரம் ஆகிய பகுதிகளில் உணவு வழங் கப்பட்டன. திடீரென்று இதற்கான களப்பணியாளர்களை திரட்ட முடியாத சூழலில், பெரியார் திடலில் சந்தா வழங்கும் விழாவுக்கு வருகை தந்திருந்த தோழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 2000 டப்பாக்களில் உணவை அடைக் கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உரிய இடங்களுக்கு அனுப்பப்பட் டது. இப்பணிகளில் ஊடகவிய லாளர் அழகிரிசாமி, தஞ்சை இரா. ஜெயக்குமார், செந்தூர்பாண்டியன், ஓசூர் வன வேந்தன், கிசோர், பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் ஆகியோர் அப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக முடித்துக் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மக்களுக்கு இன்றைய தேவையான மருத்துவ உதவிகள் செய்யும் பொருட்டு, பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் முதல் கட்டமாக வருகிற டிசம்பர் 16, 17 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு தேதிகளில் அமைந்தகரை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, நடத்தப்பட இருக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *