23.10.2023, அன்று திருச்சியில் ஆளுநர் பேச்சு. 1857 சிப்பாய் கலகமே முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற வரலாறே, தவறாகப் பதிவு பெற்றது.
காரணம் அன்று ஆங்கில அரசிலும், பின்பு இந்திய அரசிலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய உயர் ஜாதியினர் தென் தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்மையான சுதந்திர போராட்ட வரலாறை பதிவு செய்யாது மறைத்தனர்.
இதைத் தொடர்ந்து, 2014இல் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. அரசும் இதே வேலையைச் செய்ததை, ஆளுநர், ரவியும் அறிந்தும், திருச்சியில் தவறான, பொய்ச் செய்திகளை பேசியுள்ளார்.
இதோ ஆதாரம்: இச்செய்தி தவறென மறுத்து நான் 16.11.2017 அன்று, ஒன்றிய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி, பதிவு அஞ்சலில் அனுப்பியுள்ளேன்.
இதனுடைய முழு தகவலும், மதுரையில் (18.08.2023,)தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்தேன். புரட்சிக்கவிஞர் பேரவையின் தலைவரான நான், எழுதிய நூலில் உள்ளது. 29.08.23 விடுதலை,3ஆம் பக்கத்தில் உள்ளது.
– ச.தியாகு லிமிசி, பொதுச்செயலாளர்
அனைத்து ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கம். பாரதிதாசன் தெரு, மதுரை : 7904201779