ஆளுநரின் திரிபுவாதப் பேச்சு

1 Min Read

23.10.2023, அன்று திருச்சியில் ஆளுநர் பேச்சு. 1857 சிப்பாய் கலகமே முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற வரலாறே, தவறாகப் பதிவு பெற்றது.

காரணம் அன்று ஆங்கில அரசிலும், பின்பு இந்திய அரசிலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய உயர் ஜாதியினர் தென் தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்மையான சுதந்திர போராட்ட வரலாறை பதிவு செய்யாது மறைத்தனர். 

இதைத் தொடர்ந்து, 2014இல் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. அரசும் இதே வேலையைச் செய்ததை, ஆளுநர், ரவியும் அறிந்தும், திருச்சியில்  தவறான, பொய்ச் செய்திகளை பேசியுள்ளார்.

இதோ ஆதாரம்: இச்செய்தி தவறென மறுத்து நான் 16.11.2017 அன்று, ஒன்றிய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி, பதிவு அஞ்சலில் அனுப்பியுள்ளேன்.

இதனுடைய முழு தகவலும், மதுரையில் (18.08.2023,)தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம் அளித்தேன். புரட்சிக்கவிஞர் பேரவையின் தலைவரான நான், எழுதிய நூலில்  உள்ளது. 29.08.23 விடுதலை,3ஆம் பக்கத்தில் உள்ளது.  

– ச.தியாகு லிமிசி, பொதுச்செயலாளர்

அனைத்து ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கம். பாரதிதாசன் தெரு, மதுரை : 7904201779

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *