ஆளுநரை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீச்சு

1 Min Read

 நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்கள்!

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக். 25- “நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்” என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

இந்த நிலையில், மருது சகோதரர்களின் நினைவு நாளை முன் னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

“தமிழ் நிலத்தின் உரிமை களைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடி யவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவண்ணத்தில் ‘தென்பாண்டிச் சிங்கம்’ எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்கு வேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர் களது கதை நிலைத்திருக்கிறது.

தி.மு.கழக அரசு அமையும் போதெல்லாம் விடுதலை வீரர் களின் புகழ் திக்கெட்டும் போற் றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத் தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்.” 

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *