வருமான வரித்துறையில் வேலை என போலி ஆவணம்… லட்சக்கணக்கில் பணம் – ஏமாற்றிய பா.ஜ.க. பொறுப்பாளர் கைது!

1 Min Read

சேலம்,அக்.25 – வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தரு வதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.35 லட் சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சேலம் பாஜக மேற்கு மாவட்ட ளிஙிசி அணி செயலாளர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி அருகே கோல் காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலக் கண்ணன்.

இவர் சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ளிஙிசி அணியின் மாவட்ட செயலாளராக செயல் பட்டு வருகிறார்.

இவரிடம் மேச்சேரி அருகே உள்ள சாம்ராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு வேலை வேண்டி தொடர்பு கொண்டார். 

அப்போது கமலக் கண்ணனும், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ.35 லட்சம் பணம் பெற்றுள் ளார்.

மேலும் சந்திரமோக னிடம் அண்மையில், வருமான வரித்துறையில் பணியில் சேர்வதற்கான பணி ஆணையையும் வழங்கி உள்ளார்.

இந்த பணி ஆணையை எடுத்துக் கொண்டு வரு மான வரித்துறைக்குச் சென்ற சந்திரமோகன், அந்த பணி ஆணை போலி என்பதனை உணர்ந்தார். 

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்திரமோகன், இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித் தார்.

அதன்பேரில் வழக் குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையை அறிந்து, சேலம் பாஜக மேற்கு மாவட்ட ளிஙிசி அணி செயலாளர் கமலக்கண் ணனை கைது செய்து, அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

பட்டதாரி வாலிபரி டம் வருமான வரித்துறை யில் வேலை வாங்கி தரு வதாக கூறி, லட்சக்கணக் கில் மோசடியில் பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *