புதுச்சேரி அக். 25- பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்திர பிரியங்கா வின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதலமைச்சர், சபாநாயகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
புதுவையில் என்.ஆர்.காங் கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைந் ததில் இருந்தே அமைச்சரவை விரிவாக்கம், இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத் துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்கா வின் பதவியை பறித்து முதல மைச்சர் ரங்கசாமி கடந்த 8ஆம் தேதி ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கடிதம் கொடுத்தார்.
ஆனால் அதைப்பற்றி முதலமைச்சர் ரங்கசாமி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
ஆனால் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், அவைத்தலை வர் செல்வமும் சந்திரபிரியங் காவின் அமைச்சர் பதவி பறிக் கப்பட்டதாக அறிவித்தனர். மேலும் சந்திரபிரியங்கா சட்ட மன்ற உறுப்பினராக மட்டுமே செயல்படுவார் என்றும் அவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதம் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக அந்த கடிதத் துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் முதலமைச்சர் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார். என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளின் வலியுறுத்தல் காரணமாக அவர் பா.ஜ.க. கூட் டணியை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் புதுவை யில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்ட ணியை விட்டு வெளியேறினால் நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுக்கு தென்மாநிலங்க ளில் சரிவு ஏற்படும் என்பதை உணர்ந்த ஒன்றிய அரசு, அரசு நீண்ட இழுபறிக்குப்பின் கடந்த 21-ஆம் தேதி சந்திரபிரியங் காவின் நீக்கத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து சட்ட சபை வளாகத்தில் சந்திரபிரியங் காவின் அறை காலி செய்யப் பட்டது. அந்த அறைக்கு சட்ட சபை செயலாளரும் அவைத் தலைவரின் தனிச்செயலாளரு மான தயாளன் நேற்று (24.10.2023) தீடீரென ‘சீல்’ வைத்தார். இந்த தகவல் முதலமைச்சர் ரங்கசா மிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
பொதுவாக ஒரு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, அல்லது பதவிலகினாலோ அவர் கள் பயன்படுத்திய அறை உடனடி யாக ‘சீல்’ வைக்கப்படுவதில்லை. சட்டசபை செயலகத்திடம் அந்த அறையின் சாவி ஒப்படைக்கப் படும். அதுதான் நடைமுறை. ஆனால் இந்த முறை ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஏற்கெனவே பதவிவிலகல் கடிதத்தை ஏற்கும் விஷயத்தில் ஒன்றிய அரசு தன்னை அவமதிப் பதாக முதலமைச்சர் ரங்கசாமி உணர்ந்தார். தற்போது அவைத் தலைவர் மூலம் தனக்கு மேலும் நெருக்கடி கொடுப்பதாக அவர் கருதுகிறார். முதலமைச்சர் ரங்க சாமி சட்டசபை வளாகத்தில் தனது அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது சந்திரபிரியங்காவின் அறைக்கு சீல் வைக்கப்பட்டதை பார்த்து சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத் தில், சட்டசபை செயலாளர் மூலம் வைக்கப்பட்ட சீல், முதல மைச்சர் அலுவலக ஊழியரால் உடனடியாக அகற்றப்பட்டது. அடுத்ததாக முதலமைச்சரின் தனிச்செயலாளர் அமுதன் மூலம் சீல் வைக்கப்பட்டு அங்கு நோட் டீசும் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் ரங்கசாமிக் கும், அவைத்தலைவர் செல்வத் துக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தை அடைந் திருப்பது பட்டவர்த்தனமானது. இதன் மூலம் யார் அதிகாரம் படைத்தவர்? என்ற நிலை உருவாகி உள்ளது.
சந்திரபிரியங்கா விவகாரத் தில் தற்போதுதான் பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், முதல மைச்சர், அவைத்தலைவர் அலு வலக அதிகாரிகள் போட்டி போட்டு ‘சீல்’ வைத்த சம்பவம் புதுவை அரசியலில் மீண்டும் பரபரப்பையும், புயலையும் கிளப்பி உள்ளது. இதன் மூலம் வருகிற நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்பாக என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.