வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை. அக் 25 –  வாக்காளர் பட்டி யல் திருத்த பணி வரும் 27-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற் கும் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய நாளே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயல கத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

இதில், பாஜக, காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி ஆகிய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகள் பங்கேற்றன.

தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு சனி, ஞாயிறுகளில் (நவ.4, 5, 18, 19) நடைபெற உள்ளன.

இதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், உயிரிழந்த வர்கள் பெயர் நீக்கம் தொடர்பான பரிந் துரைகளை இன்றைய கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வழங்கினர். அதன் அடிப்படையில், உரிய நட வடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *