இதுதான் பகவான் சக்தியோ?

1 Min Read

நேபாளத்தில் 12 இந்திய பக்தர்கள் விபத்தில் படுகாயம்

காத்மாண்டு, அக். 25- விஜயதசமியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட பக்தர்கள் குழு நேபாளம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலுக்கு பக்திப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் பிர்குஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

மகாவன்பூர் மாவட்டம் மாடதீர்த்தா பகுதி அருகே வரும்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காத்மாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காவல் துறையினர் கார் ஓட்டுநர் அனில்குமார் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *