வித்தைகளுக்கு வேலை இல்லை!

1 Min Read

ஞாயிறு மலர்

கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு பிரதமரை வைத்து பல வித்தைகளைக் காட்ட பாஜக தலைமையும், குஜராத் அரசும் திட்டமிட்டிருந்தனவாம். இதற்காக ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையே தயாராக இருக்கும் படி மறைமுக உத்தரவுகளும் இருந்ததாம். மேலும், கோப்பையுடன் அலங்கார ஊர்தி ஒன்றை ஏற்பாடு செய்து மோடி உலகக்கோப்பையை வீரர்களுக்குக் கொடுக்கும் படத்தை பெரிதாக செய்து இந்தியா முழுவதும் அதைக் கொண்டு செல்லும் ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருந்தனவாம். ஆனால், அத்தனையும் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தின் மூலம் ஒன்றுமில்லாமல் போனது.

பிசிசிஅய் அணி வென்ற பிறகு துரோணாச்சாரியார் பிரதமர் மோடி கைகளில் உலகக் கோப்பையை கொடுப்பது போன்றும், அதை பிசிசிஅய் அணியின் கிரிக்கெட் வீரர்கள் கைதட்டி ரசிப்பது போன்றும் படங்கள் எல்லாம் தயாராக இருந்தன. அதில் ஒன்றுதான் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதழாக்கம்:  சரவணா இராஜேந்திரன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *