சுகாதாரத் துறையில் செவிலியர் காலிப் பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

சுகாதாரத் துறையில் செவிலியர் பணிஇடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: துணை செவிலியர்கள் / கிராம சுகாதார செவிலியர்கள் பிரிவில் 2250 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிளஸ் 2, இரண்டு ஆண்டு துணை செவிலியர் / பல்நோக்கு சுகாதார பணியாளருக்கான பயிற்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு

ஊக்க மதிப்பெண்: கரோனா காலத்தில் அரசு, ‘கரோனா கேர்’ மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.

கடைசி நாள்: 31.10.2023

விவரங்களுக்கு: mrbonline.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *