இதனை சட்டம் அனுமதிக்கிறதா?

Viduthalai
1 Min Read

கோவில் விழாவில் ‘பேய்’ விரட்டுவதாக பெண்களை சாட்டையால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனம்

அரசியல்

திருச்சி, அக். 25- திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயுதபூஜை மறு நாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட் டும் வினோத வழிபாடு நடத்தப்படு கிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று (24.10.2023) நடை பெற்றது. இதையொட்டி அச்சப்பன், அகோர வீரபத்திரன், மதுரைவீரன், வெடிகாரகுள்ளன், பாப்பாத்தி, மகா லட்சுமி உள்ளிட்ட உருவங்களுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றிய பின்னர் கோவில் வளாக பகுதியில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத் தினராம். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலை யில் தேங்காய் உடைக்கப்பட்ட கொடூரச் செயலும் நடந்துள்ளது.

இதனிடையே, காட்டுகோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடி களை அவிழ்த்து கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந் திருந்தனர். அப்போது மூடச் செயல் களின் உச்ச கட்டமாக அங்கு வந்த கோவில் பூசாரி பெண்களின் கைக ளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு முதல் 5-க்கும் மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள் அதை சற்றும் பொருட் படுத்தாது, கோவிலுக்குள் சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்தும், விபூதி பிரசாதம் வாங்கியும் சென்றனராம்.

இப்படி பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் பில்லி, சூனியம், பேய் பிடித்தல், காத்து கருப்பு ஆகிய வற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டிக் கொண்டு சாட்டையால் அடி வாங் கினால் குழந்தை பாக்கியம் கிடைக் கும் என்றும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பக்தர்கள் வைத் துள்ள மூடநம்பிக்கையே இந்தக் காட்டுமிராண்டித் தனத்திற்கான அடிப்படை என்பது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *