சென்னையில் அக்டோபர் 28இல் வேலைவாய்ப்பு முகாம்

1 Min Read

சென்னை, அக். 26 – கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு முகாம், வரும் 28ஆம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை 8:00 – மதியம் 3:00 மணி வரை, இம்முகாம் நடக்கிறது.

இதில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் இருந்து, 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யஉள்ளனர். எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, அய்.அய்.டி., உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம். பங்கேற்க ஆர்வமுள்ளோர் www.tnprivatejobs.tn.gov.in 

 என்ற இணை தளத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு, 044- – 2461 5160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *