தீக்கதிர் 5ஆம் பதிப்பாக நெல்லையிலிருந்து வெளிவரும் சிறப்பான தகவல் அறிந்து பெருமிதம் கொள்கிறோம். சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் 1925இல் தோன்றியது பொருத்தமான வரலாற்று நிகழ்வாகும். சுயமரியாதை, பொதுவுரிமைக் கருத்து ஒரு பக்கமும், பொதுவுடைமைக் கருத்து மறுபக்கமும் சுழன்றடித்து, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டைத் தனித்துவ பூமியாக வடிவமைத்துக் கொடுத்துள்ளன. தீக்கதிர் 60 ஆண்டுகாலமாக எவ்வளவோ சோதனைகளுக்கும், பொருளாதார இடையூறுகளுக்கும் இடையில் தனது இலட்சியப் பயணத்தை தொடருகிறது என்பது வரலாற்று உண்மை. மதவாதமும், முதலாளித்துவமும் தலைதூக்கி நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில், ‘‘தீக்கதிரே வருக! உன் கொள்கை தீப்பிழம்பை நான்கு திசைகளிலும் சுழற்றிடுக!’’ – என்று வரவேற்கிறோம் – வாழ்த்துகிறோம்.
தீப் பிழம்பைச் சுழற்றிடுக! தீக்கதிருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books