தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

Viduthalai
2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக். 26 – அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப் படும் என தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர் வால், சுமார் 16 லட்சம் அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய் வூதியதாரர்கள் பயன்பெறுவார் கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற் றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக் கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதி களைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல் பட்டு வருகின்றது.

அவ்வகையில், அரசு அலுவலர் கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உட னுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அக விலைப்படி உயர்வை செயல்படுத் தப்படும் என்று ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற் போது 42 சதவீதமாக உள்ள அக விலைப்படியை 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட் டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர் வால், சுமார் 16 லட்சம் அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யதாரர்கள் பயன்பெறுவார்கள். 

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *