மணிப்பூர் பிரச்சினையில் தப்பிக்க முடியாது மோடி மீது காங்கிரசு சாடல்

1 Min Read

புதுடில்லி,அக்.26 – மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி 175 நாள்களாகும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து முழுவதும் விலகி நின்று பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி யின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ‘மணிப்பூரில் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் பெரும்பான் மையாக இருக்கும் நிலையில், அவர்களையும் முதலமைச்சரையும் இதுவரை பிரதமர் அழைத்து ஏன் பேசவில்லை?

மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச் சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அவரது மாநில பிரச்சினைக்காக ஏன் பிரதமரை சந்திக்க முடிய வில்லை?

அனைத்து விவகாரங்கள் குறித்து பேசும் பிரதமர் மோடி யால் மணிப்பூர் பிரச்சினை குறித்து 4-5 நிமிஷங்களுக்கு மேல் ஏன் பேச முடியவில்லை?

மணிப்பூரின் பல்வேறு சமூகத் தினரால் நிராகரிக்கப்பட்ட மாநில முதலமைச்சரை ஏன் இது வரையில் மாற்றவில்லை?

மணிப்பூர் கலவரம் தொடங்கி யதில் இருந்து பிரதமர் மோடி தலையிடாமல் அந்த மாநிலத்தை அப்படியே கைவிட்டதை நாட்டு மக்களும், சமாதானம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர் களும் கவனித்துக் கொண்டிருக் கின்றனர். இந்தப் பிரச்சினைக்குப் பொறுப்பேற்பதில் இருந்து பிரத மர் மோடி தப்பிக்க முடியாது’ என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *