ஆவடி, டிச. 12- தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16.12.2023 சனிக்கிழமை அம்பத்தூர் பகுதியில் நடைபெற உள் ளதால் அது குறித்து ஆலோசனைக் கூட்டம் பெரியார், அண்ணா, கலை ஞர் பகுத்தறிவு பாசறை யின் சார்பில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற் புரையுடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இள வசரன் தலைமையில் நடைபெற்றது.
ஏ.கோபி( காங்கிரஸ்) தேவேந்திர குமார் (மேனாள் நகர மன்ற உறுப்பினர்)அருமைநாதன் (காங்.) நாகராசன் (பெரியார் திராவிடர் கழகம்) பூ. இராமலிங்கம் (அம்பத் தூர் பகுதி கழக தலைவர்) அரவிந்தன், சின்னப்ப தமிழர், பாண்டியன், கிருஷ்ணவேணி, ஜோதி, மோனிஷ், செல்வி.அபர்ணா, பொன்னுரங் கம், கருப்பசாமி, ஆறு முகம், சசிகுமார், கார்த்தி (வி.சி.க.) கெஜலட்சுமி ஆசிரியர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத் துவது என்றும் விடுதலை சந்தாக்களை வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கினர்.
தோழர் பிச்சுமணி அவர்களின் பெயர்த்தி அர்ச்சனீஸ் அவர்களின் 5ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக் கும் கேக் வழங்கினார். இறுதியில் தோழர் பிச்சு மணி நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்ட ஆலோசனை
Leave a Comment