எம்.பி. பதவி பறிப்பை எதிர்த்து மகுவா மொய்த்திரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு

viduthalai
3 Min Read

புதுடில்லி,டிச.12- பணம் பெற் றுக் கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில், நாடாளு மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன் றத்தில் 11.12.2023 அன்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாடாளுமன்ற உறுப்பினர் பத வி யில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்ட விரோதம்’ என்று குறிப்பிட் டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மேற்கு வங்கத்தின் கிருஷ் ணாநகர் தொகுதியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை.
பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராக மொய்த்ரா கேள்விகளை எழுப் பினார். இருவர் குறித்தும் மக்கள வையில் அவதூறு குற்றச்சாட்டு களை சுமத்தினார். இந்த கேள்வி களை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியி டம் இருந்து மொய்த்ரா பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டது. மேலும், மொய்த்ரா வின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக் கும் ஹிராநந்தானி பயன்படுத்திய தும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் மேனாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத் ராய் இந்த ரகசியத்தை அம்பலப் படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக பாஜக உறுப்பி னர் வினோத்குமார் சோன்கர் தலை மையிலான நாடாளுமன்ற நெறி முறைகள் குழு விசாரணை நடத் தியது. கடந்த நவம்பர் 9ஆம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக் கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த் ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நாடா ளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் விஜய் சோன்கர் 500 பக்க அறிக் கையை மக்களவையில் தாக் கல் செய்தார். அப்போது, திரிண மூல் மக்களவை உறுப் பினர்கள் பேசும் போது, “500 பக்க அறிக் கையை சில மணி நேரங்களில் படிக்க முடியாது. 3 நாட்கள் அவ காசம் வேண் டும்” என்று கோரினர். இதை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. விவாதத்தின் போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கோரினார்.

இதற்கு அவைத் தலைவர் பதிலளித்த போது, “நெறி முறைகள் குழுவின் விசா ரணையின்போது மொய்த்ரா தனது கருத்தை பதிவு செய்ய போதிய அவகாசம் வழங்கப் பட்டது. ஆனால் நெறி முறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்க ளவையில் கருத் துகளை எடுத்து ரைக்க முடியாது. இதற்கு நாடா ளுமன்ற விதிகளில் இடமில்லை” என்று தெரிவித்தார்.
சுமார் 30 நிமிட விவாதத்துக் குப் பிறகு மொய்த்ராவின் நாடா ளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது தொடர்பான தீர்மா னம்மீது வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதை புறக்கணித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். பெரும் பான்மை எம்பிக்களின் ஆதரவு டன் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.
இதன்மூலம் மஹுவா மொய்த் ராவின் நாடா ளுமன்ற உறுப்பினர் பதவி அதிகாரப்பூர்வமாக பறிக்கப் பட்டது.
இதுகுறித்து நாடாளு மன்ற வளாகத்தில் மொய்த்ரா செய்தியா ளர்களிடம் கூறும் போது, “என் மீதான குற்றச் சாட்டுகளுக்கு எவ்வித ஆதா ரங்களும் கிடையாது. நெறி முறைகள் குழு முழுமையாக விசாரிக்காமல் ஒரு தலைப் பட்ச மாக அறிக்கை அளித்துள்ளது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *