புயல் வெள்ள பாதிப்பு கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமின்றி நகல்களை பெற இணையதளம் உருவாக்கம் : அரசு அறிவிப்பு

1 Min Read

சென்னை, டிச.12 புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ் களை இழந்த மாணவர் களுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல் களைப் பெற இணையதளம் உரு வாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:

மிக்ஜாம் புயல் கார ணமாக சென்னை மாவட் டத்திலும், செங் கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திரு வள்ளூர் மாவட்டங்களி லும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற் பட்டு கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

வெள்ள பாதிப்பி னால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான் றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ் களின் நகல்களை கட்டண மின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணைய தளம் உயர்கல்வி துறை யால் உருவாக்கப் பட் டுள்ளது.

மாணவர்கள் தங்க ளின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை மேற்கண்ட இணைய தளம் வாயிலாக இன்றி லிருந்து பதிவு செய்ய லாம்.
சான்றிதழ்களின் விப ரங்களை பதிவு செய்த பின் அவர்களது மின் னஞ்சலுக்கு ஒப்புகை அனுப்பப்படும்.

பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென் னையில் வழங்கப்படும்.
மேலும், இணைய தளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற தொழில் நுட்ப கல்வி இயக் கத்தில் செயல்படும் கட்டண மில்லா அழைப்பு மய் யத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *