மணமக்கள் கோ.பிரபாகரன் – சிவசக்தி நன்கொடை

1 Min Read

இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இரா. கோவிந்தன் – கார்த்திகை மயில் இணையரது மகன்
கோ. பிரபாகரன் – சிவசக்தி மணவிழா 10.12.2023 அன்று திருவல்லிபுத்தூரில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி, இராசபாளையம் மாவட்டத் தலைவர் பூ. சிவக்குமார், விருதுநகர் மாவட்ட தலைவர் பெ.நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட செயலாளர் தி. ஆதவன், இராசபாளையம் நகர தலைவர் இரா. பாண்டிமுருகன், வானவில் ம. கதிரவன் மற்றும் கழகத் தோழர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தினர். மணவிழா நடைபெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடையாக மண மக்கள் வழங்கிய ரூ.5 ஆயிரத்தை தலைமைக் கழக அமைப் பாளர் இல. திருப்பதி தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *