புயல் – வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!

viduthalai
1 Min Read

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் – பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் – பெரியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர் சார்பில்
புயல் – வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை
முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!

இயற்கையின் சீற்றம் காரணமாக புயல் – மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மக்கள் பெரும் அல்லலுக்கும், துயருக்கும் ஆளாகியுள்ளார்கள் – தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு ஒரு சீரான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மட்டும் அல்ல; தன்னார்வ நிறுவனங்களும் ‘உற்றுழி உதவுதல்’ என்ற முறையில், உதவிக் கரத்தை நீட்டவேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடும், மனிதநேயத்துடனும், ‘‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்‘’, ‘‘பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்‘’ என்கிற அறக்கட்டளை அமைப்புகளின் சார்பிலும், ‘‘பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள்” சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சந்தித்து
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் இன்று (11.12.2023) காலை 11 மணியளவில் வழங்கினார். நூல்களைக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முதலமைச்சரிடம் அளித்தார்.
வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், அரசின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதலமைச்சரிடம் உரையாடி விடைபெற்றார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உடன் சென்றிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *