செய்யாறு – வடமணப்பாக்கத்தில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கு பரிசளிப்பு

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

வடமணப்பாக்கம், நவ.25–_  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப் பாக்கத்தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அரசினர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 23.11.2023 அன்று தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலை மையாசிரியர் ந.வேதபுரி தலைமை வகித்து, பெற்றோர் ஆசிரியர் கழக மேனாள் தலைவர் தேசிய, மாநில விருது பெற்ற நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் _- வேதவள்ளி விஜய ராகவன் கல்வி அறக்கட்டளை மூலம் தொடர்ந்து இப்பள்ளியில் 20 ஆண்டுகளாக தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெறுவதை பாராட்டிப் பேசினார். விழாவிற்கு வந்திருந்த அனை வரையும் முனைவர் பேரா. மு.தமிழ் மொழி வரவேற்று பேசினார். 

செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு நகர தலைவர் தி.காமரா சன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் என்.வி.கோவிந் தன், சிறுநல்லூர் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் டி.சின்னதுரை, திருவத்தூர் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எச்.முபாரக் ஆகி யோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

வேதவள்ளி விஜயராகவன் அறக்கட்டளை நிறுவனரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவருமான வி.வெங்கட்ராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 500க்கு மேற்பட்ட மாணவ,  மாணவியர்கள், ஆசிரி யர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *