கண்ணாடி மணி தொழிற்சாலை காஞ்சிபுரத்தில் கண்டுபிடிப்பு

2 Min Read

சென்னை, டிச. 10 – காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கடல்மங்கலம் என்ற ஊரில், பழைமையான கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களான, லுத்விஸ் ஜெனோமோ பென்சர், ரெபேக்கால், பவித்ரா, ஜெயசிறீ, அன்பரசி, மதுமிதா, அபிராமி ஆகியோர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில், உத்திரமேரூரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் கடல்மங்கலம் என்ற ஊரில், கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்களை கண்டறிந்தனர். தொடர்ந்து ஆய்வு செய்ததில், மூன்று இடங்களில் இந்த தொழில் நடந்து உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, மாணவர் லுத்விஸ் ஜெனோமோ பென்சர் கூறியதாவது: கடல்மங்கலத்தில் கள ஆய்வு செய்த போது, இடைக்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங் களின் சிதிலங்களும், பழைய, நுண் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளும் கிடைத்தன.
மேலும், ஆயிரக்கணக்கான கண்ணாடி மணிகள் பல வடிவங்களிலும், வண்ணங் களிலும் கிடைத்தன.

இந்த கண்ணாடி மணிகள் தயாரிப்பதற்கான உலை களை, அய்ந்து இடங்களில் கண்டறிந்தோம். அவற்றில் ஒன்று மட்டுமே நல்ல நிலையில் உள்ளது. இந்த உலைகள், இரட்டை சுவருடன் பானை ஓடுகள் நிரப்பப்பட்டதாக, வட்ட வடிவில் அமைந்துள்ளன. இவ்விடங்களில், சிவப்பு, கருப்பு – சிவப்பு பானை ஓடுகள் நிறைய கிடைக்கின்றன.
இதிலிருந்து, இந்த தொழிற்சாலை சங்க காலத்தில் இயங்கியதை அறிய முடிகிறது. சில ஓடுகளில் கண்ணா டியை சூடேற்றிய அடையாள மாக, கண்ணாடியின் தாது பூசப்பட்டுள்ளது. உலைகள் இருந்த இடத்தில், ஒரு காலத்தில் ஆறு ஓடியதற்கான தடயமாக, உலைகள் நீரால் அரிக்கப்பட்ட அடையாளம் தெரிகிறது. மணிகள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், அடர் ஆரஞ்சு வண்ணங்களில் கிடைத்து உள்ளன. மணிகள் தயாரிப்பின் போது உடைந்தவையும், தயாரிப்புக்கு முந்தைய மணிகளும் கிடைத்து உள்ளன. இந்த தாதுப்பொருட்களும், உலைக ளும் கிடைத்துள்ளதால், இந்த பகுதியில், 2,000 ஆண்டுக ளுக்கு முன், கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *