நிவாரணப் பொருள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக்காக வாட்ஸ்அப் எண் வெளியீடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, நவ. 9- புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்களை வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக் கான வாட்ஸ் அப் எண்ணை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘மிக்ஜாம்’ புயலால் முன் எப் போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம் களில் பாதுகாப்பாக தங்க வைக் கப்பட்டனர். அவர்களுக்கு தேவை யான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அதன்படி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்க ளுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்க பல்வேறு தொண்டு நிறுவ னங்கள் முன்வந்துள்ளன. அந்த வகையில், தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெறும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் பகு திகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய அய்ஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறு வனங்கள் 73977 66651 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *