அக்டோபர் 31 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

1 Min Read

சென்னை, அக்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அக்.31இ-ல் கூடுகிறது. தமிழ்நாடு தொழில் துறை சார்பில் சென்னையில் வரும் 2024 ஜன.7, 8-இல் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை வரும் அக்.31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதில், புதிய முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *