கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

25.11.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

*ஹிந்துயிசம் என சொல்லக் கூடாது. ஸநாதனத்தைப் பாதுகாக்கும் ஹிந்துத்வா என்பதே சரி – பாங்காங்கில் நடந்த உலக ஹிந்து மாநாட்டில் முடிவு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

*ஹிந்து கோயில் சொத்துக்கள் ரூ.5500 கோடியை மீட்ட தி.மு.க. மீது குற்றம் சுமத்துவதா? ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

*எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மோடி அரசு பலவீனப்படுத்த நினைக்கிறது. 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அழைப் பாணை அனுப்பியதை எதிர்த்து தமிழ் நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

*சென்னை மதுபான விடுதியில் பெண்ணை துன்புறுத்தியதான குற்றச்சாட்டில், நியூஸ் தமிழ் 24ஜ்7 ஊடக செய்தியாளர் மற்றும் அய்ந்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு.

தி இந்து

*மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பஞ்சாப் அரசின் வழக்கின் தீர்ப்பை படிக்குமாறு கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

*அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 21 மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. தேர்வு நடத்திட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு.

தி டெலிகிராப்

*மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள்  நவம்பர் 26 முதல் 28 வரை, மூன்று நாள் போராட்டம் – சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் முடிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா

*தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டு – மேனாள் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் நட்ராஜ் மீது பிணையில் வெளியில் வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.

 *பீகார் மட்டுமல்ல, இந்திய அரசியலில் நிதிஷ் குமார் ஓபிசி முகமாக விளங்குகிறார் என பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா பெருமிதம்.

 – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *